Posts

திருமந்திரம் - பாடல் #1101

  திருமந்திரம் - பாடல் #1101: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) வெளிப்படு வித்து விளைவறி வித்துத் தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே . விளக்கம்: பாடல் #1100 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளிய வயிரவி தேவி அதன் பயனாக பேரறிவு ஞானத்தைக் கொடுத்து அந்த ஞானத்தின் பயனாக தெளிவான சிந்தனையைக் கொடுத்து அதன் பயனாக பேரின்பத்தை அடைய வைத்து அதன் பயனாக பெருஞ்சோதி வடிவான இறைவனுடன் கதிர் வடிவான எம் ஆன்மாவை சேர வைத்து அதன் பயனாக எம்மையும் சோதி உருவம் பெற வைத்து எமது ஆன்மா முக்தியடையும்படி செய்து எம்மை முழுவதும் ஆட்கொண்டாள்.

திருமந்திரம் - பாடல் #1100

  திருமந்திரம் - பாடல் #1100: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) கோலக் குழலி குலாய புருவத்தள் நீலக் குவளை மலர்கின்ற கண்ணினாள் ஆலிக்கு மின்னமு தானந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே. விளக்கம்: பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமான மாபெரும் கருணையுடைய வயிரவியின் வடிவத்தை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். அழகிய கூந்தலுடன் வளைந்த புருவங்களைக் கொண்டு நீல நிறத்தில் இருக்கும் குவளை மலர் மலர்ந்தது போன்ற கண்களோடு இனிமையான அமிழ்தத்தோடு சேர்ந்து பேரானந்தமாக இருக்கின்ற பேரழகு பொருந்திய வயிரவியே பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமாக இருந்து அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளுகின்றாள்.

திருமந்திரம் - பாடல் #1099

  திருமந்திரம் - பாடல் #1099: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி யுணரி லுடலுயி ரீசனாம் பேதை யுலகிற் பிறவிகள் நாசமாம் ஓத வுலவாத கோலமொன் றாகுமே. விளக்கம்: பாடல் #1098 இல் உள்ளபடி ஆதி சக்தியான வயிரவியே எப்போதும் இளமையுடன் அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து இடத்திற்கும் அரசியாக வீற்றிருக்கின்றாள். அவளது மந்திரத்தை செபித்து தமக்குள் அவளை உணரும் சாதகர்களின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடும். மாயையால் மயங்கி இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் படி எப்போதும் அழியாத உடலையும் அவர்கள் பெற்று விடுவார்கள்.

திருமந்திரம் - பாடல் #1098

  திருமந்திரம் - பாடல் #1098: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) சாற்றிய வேதஞ் சராசர மைம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடு மிருள்வெளி தோற்று முயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொ டாய்நிற்கு மாதி முதல்வியே. விளக்கம்: பாடல் #1097 இல் உள்ளபடி சாதகர்கள் சமர்ப்பணம் செய்த சிதாகாய மந்திரம் வேதமாகவும், அண்ட சராசரங்களாகவும், ஐந்து பூதங்களாகவும், நான்கு திசைகளிலும் தேடிப் பார்க்கும் மூன்று கண்களை உடைய இறைவியாகவும், இருண்ட அண்டமாகவும், ஒளி பொருந்திய பரவெளியாகவும், பலவிதமான உடல்களில் பிறவி எடுத்து வரும் உயிர்களாகவும், சோதி வடிவாகவும், அசையும் சக்தியான பராசக்தியாகவும், அனைத்தையும் உருவாக்குகின்ற ஆற்றலுடன் அனைத்துமாகவும் இருக்கின்ற ஆதி தலைவியாகவும் இருக்கின்றது. கருத்து: சிதாகாய மந்திரத்தின் தன்மைகளை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

திருமந்திரம் - பாடல் #1097

  திருமந்திரம் - பாடல் #1097: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்று மிரண்டு மொருங்கிய வுள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே. விளக்கம்: பாடல் #1096 இல் உள்ளபடி பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் வயிரவியானவள் நீல நிற திருமேனியுடன் அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கின்றாள். எவரொருவரின் மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக இருக்கிறதோ அவரின் உள்ளத்திற்குள் இறைவனுடன் இறைவியும் சேர்ந்து புகுந்து அங்கேயே வீற்றிருந்து அருள் புரிகின்றாள். அவளுடைய நன்மை தரும் அருளை அடைய விரும்பும் உயர்ந்தோர் அவளை தேடி அடைந்து வயிரவியின் மந்திர செபத்தை சமர்ப்பணம் செய்வார்கள். கருத்து: மனம் வாக்கு உடல் ஒன்றாக இருப்பது என்பது மனதை ஒருநிலைப் படுத்தி சிதாகாய மந்திரத்தை செபித்து நேத்திர முத்திரையை செய்யும் போது பாடல் #1096 இல் உள்ளபடி தானாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் இறைவனும் இறைவியும் அவர்களின் உள்ளத்திற்குள் ஒன்றாக வீற்...

திருமந்திரம் - பாடல் #1096

  திருமந்திரம் - பாடல் #1096: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணு மகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. விளக்கம்: பாடல் #1095 இல் உள்ளபடி உரக்க (சத்தமாக) செபித்த சாதகர் தமது மூச்சுக்காற்றுடன் சேர்ந்து 'சம்' எனும் மந்திரத்தை உயிருடன் மாயை சேர்ந்து இருக்கும் பாவனையில் தாமாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் வயிரவியானவள் பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருப்பாள். குறிப்பு: மூச்சுக்காற்றுடன் 'சம்' மந்திரத்தை சத்தமாக சாதகர் செபிக்கும் போது அதன் உச்ச நிலையில் அவரது உடலோடு இருக்கும் மாயையால் தானாகவே அவரது விரல்கள் விரிந்த சங்கு முத்திரையை பிடிக்கும். இந்த மந்திரத்தை சங்கு முத்திரையுடன் இறைவிக்கு சமர்ப்பணம் செய்தால் இறைவியே சாதகருக்குள் வந்து வீற்றிருப்பாள்.

திருமந்திரம் - பாடல் #1095

  திருமந்திரம் - பாடல் #1095: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்) பேசிய மந்திர மிகாரம் பிரித்துரை கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராண னுபதேச மாகைக்குக் கூசிய விந்து வுடன்கொண்டு கூவே. விளக்கம்: பாடல் #1092 இல் உள்ள சிதாகாய மந்திரத்தை எப்படி செபிப்பது என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1094 இல் உள்ளபடி செபித்த சிதாகாய மந்திரத்தில் 'இ' என்ற எழுத்தை நீக்கிவிட்டு 'ச' எழுத்தை முன்னே வைத்து 'சம்' எனும் மந்திரத்தை இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் உச்சரித்து மூச்சுக்காற்று உபதேசித்த (பாடல் #1092 இல் உள்ளபடி) வயிரவி மந்திரத்தை பிரகாசமான ஒளிக்கீற்றுக்களை உடைய குண்டலினி (பாடல் #860 இல் காண்க) அக்னியோடு சேர்த்து உரக்க (சத்தமாக) செபியுங்கள்.