திருமந்திரம் - பாடல் #1078
திருமந்திரம் - பாடல் #1078: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்க ளிருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் றென்னனும் ஆமே.
விளக்கம்:
பாடல்
#1077 இல் உள்ளபடி வயிரவியிடம் புண்ணித்தைப் பெற்று குருவாக இருப்பவர்கள்
இறைவனின் தன்மையில் இருந்து வயிரவி மந்திரத்தையும் அதைச் சொல்லும்
முறையையும் அருளுவார். குரு சொன்ன முறைப்படி வயிரவி மந்திரத்தை எண்ணத்தில்
வைத்து இருபத்தேழு நாட்களும் சூரிய கலை சந்திர கலை ஆகியவற்றின் மூலம்
உள்ளிழுத்த மூச்சுக்காற்றால் மூலாதாரத்தில் இருக்கும் அக்னியை வளர்த்து
அதை முழுவதுமாக ஆராய்ந்து அதன்படி தொடர்ந்து சிறிதும் மாறாத சிந்தனையுடன்
மானசீகமாக செபித்து சாதகம் செய்து வருபவர்களின் சிந்தனையில் பேரழகுடைய
சிவபெருமான் வந்து வீற்றிருப்பான்.
கருத்து:
குரு கூறிய முறைப்படி வயிரவி மந்திரத்தை சாதகம் செய்யும் போது நொடிப்
பொழுது நேரம் கூட இறைவனைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்
செய்பவர்களின் சிந்தனையில் இறைவன் வந்து வீற்றிருப்பான்.
Comments
Post a Comment