திருமந்திரம் - பாடல் #1080
திருமந்திரம் - பாடல் #1080: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
ஓதிய நந்தி யுணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந் துரைசெயும்
போத மிருபத் தெழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந் தாளுமே.
விளக்கம்:
பாடல்
#1079 இல் உள்ளபடி சாதகர்களின் உள்ளத்திற்குள் திரிபுரையோடு ஒன்றாகக்
கலந்து வீற்றிருக்கும் இறைவனின் திருவருளால் தமக்குள்ளே அவரை குருவாக
உணரலாம். அப்படி குருவாக உணர்ந்த இறைவனே தருமத்தின் படி தகுதியானவர்களுக்கு
வேதங்களில் உள்ள முறையில் வயிரவி மந்திரத்தையும் அதை சாதகம் செய்யும்
முறையையும் அருளுகின்றார். அவர் அருளிய முறையின் படி இருபத்தேழு நாட்கள்
வயிரவி மந்திரத்தை சாதகம் செய்தால் அதன் சக்தி பெருகிக் கொண்டே இருந்து
வயிரவியானவள் சூலம் தாங்கிய சோதி வடிவாக வந்து சாதகரை ஆட்கொள்வாள்.
Comments
Post a Comment