திருமந்திரம் - பாடல் #1086

 

திருமந்திரம் - பாடல் #1086: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பூசனை கெந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத் தொலிவந் துரைசெய்யும்
வாச மிலாத மணிமந் திரயோகந்
தேசந் திகழுந் திரிபுரை காணே.

விளக்கம்:

பாடல் #1085 இல் உள்ளபடி யோகியர்களின் உள்ளத்திற்குள் வந்து வீற்றிருக்கும் பராசக்தியை மானசீகமாக பூஜிக்கும் முறையை இந்தப் பாடலில் அறியலாம். சந்தனம் குங்குமம் பன்னீர் முதலிய நறுமணப் பொருள்களால் அபிஷேகம் செய்தும், வாசனை மிக்க மலர்களை மாலையாக செய்து அணிவித்தும், தங்களின் மூச்சுக்காற்றையே நாதஸ்வரமாகவும் இதயத் துடிப்பை மிருதங்க வாத்தியமாகவும் பல நாடிகளின் துடிப்புகள் உபவாத்தியங்களாகவும் கொண்டு இசைத்தும், மணியடித்தால் எதிரொலிக்கும் ஒலி போல வாயால் உச்சரிக்காமல் மனதிற்குள்ளேயே உள்ளுக்குள் எதிரொலிக்கும்படி மந்திரங்களை செபித்தும் யோகம் செய்து உலகங்கள் அனைத்திலும் நிறைந்து இருக்கும் திரிபுரையை தரிசிக்கலாம்.

கருத்து: மானசீக பூஜையின் மகத்துவத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

திருமந்திரம் - பாடல் #1090

திருமந்திரம் - பாடல் #1098

திருமந்திரம் - பாடல் #1084