திருமந்திரம் - பாடல் #1087

 

திருமந்திரம் - பாடல் #1087: நான்காம் தந்திரம் - 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணுஞ் சிவனும் பிரமனும் மாயனுங்
காணுந் தலைவிநற் காரணி காணே.

விளக்கம்:

பாடல் #1086 இல் உள்ளபடி யோகியர்கள் தரிசித்த திரிபுரை சக்தியானவள் உலகத்தில் காணப்படுகின்ற அனைத்து விதமான தெய்வங்களின் உருவமாகவே இருக்கின்றாள். ஒரே விதமான தங்கத்திலிருந்து பலவிதமான நகைகள் செய்யப்படுவது போல ஒரே சக்தியானவள் அனைத்து தெய்வங்களாக இருக்கின்றாள். சாதகர்கள் போற்றுகின்ற மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் செய்கின்ற அழித்தல், படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களுக்கு நன்மை செய்யும் காரணியாக திரிபுரை சக்தியே இருப்பதைக் கண்டுகொள்ளுங்கள்.

கருத்து: உலகத்து உயிர்கள் வணங்குகின்ற பலவிதமான தெய்வங்கள் அனைத்துமே ஒரே சக்தியான திரிபுரையின் அம்சங்களாகவே இருக்கின்றன என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

திருமந்திரம் - பாடல் #1090

திருமந்திரம் - பாடல் #1098

திருமந்திரம் - பாடல் #1084